Monday, June 14, 2021

ஆயிரம் நிலவே வா



ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 
இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட 

நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க 
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன 
இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத உன் மேனி தாராயோ -- (ஆயிரம் நிலவே)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ 
கார்குழலும் பாய் விரிக்கும் கண்சிவந்த வாய் வெளுக்கும் 
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ 
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக -- (ஆயிரம் நிலவே)

அல்லி மலர் மேனியிலே ஆடையென நானிருக்க 
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெரும் 
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ 
இன்பம் இதுவோ இன்னும் ஏதுவோ தந்தாலும் ஆகாதோ -- (ஆயிரம் நிலவே)

பொய்கை எனும் நீர் மகளின் பூவாடை போர்த்திருந்தாள் 
தென்றல் என்னும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள் 
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ 
அந்த நிலையில் தந்த சுகத்தை நான் உணர காட்டாயோ -- (ஆயிரம் நிலவே)

Thursday, June 10, 2021

S.P. Balasubrahmanyam at the age of 35 and 70 singing Ilaya Nila song

Singing at the  age of 70. Age is Just A Number.


Age is Just A Number. SPB at 35.


பயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

Sunday, June 6, 2021

Anthanaal.. nyabagam.. nenchele.. vandathe...

The only song which nicely describes the true friendship that prevails in school days. This song takes me to my school day friends. Wonderful acting by Sivaji Ganesan and Major. What a wonderful words: PAASAM ENDRUM, NESAM ENDRUM, VEEDU ENDRUM, MANAIVI ENDRUM, NOORU SONTHAM VANTHA PINBUM, THEDUGINDRA AMAITHI ENGE??

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே

நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்

பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது கவலையும் வந்தது

பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
அமைதி எங்கே?

(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன்
உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்

(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

படம்: உயர்ந்த மனிதன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்



Sanskrit Learning